சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsPKPeqBMGYaXohDGevy7lrBJdhI3SbiXCV3xVBzRXDVBfwTikMoXuwrstDmD3uXXJcZnNftuWx6Ry8QM4Og4uQShSM574ddAZvoyv-3mz8X84OP4UK4l9cXuJRcd2yyVf9Z1uuVrC7W9e-LwVKE8WFn_Ai3hGvdSQyzLm7ilhzAGzkF89DssBTjH9v04/s320/silapathikaaram%20final.jpg)
http://www.tettnpsc.com/ is a site containing TNPSC, TET, Police Exam Study Materials, Model Test Papers, Free online test, TNPSC Group II, Group 2A, VAO, TNTET, Police Exams, TNSURB Exam previous year question papers with answers pdf, TNPSC Group 4 model question paper with answer
1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
விளக்கம்: காகம் தன்னை விட வலிமையான கோட்டானை பகலில் வெல்லும். அதுபோல பகைவரை வெல்ல அரசன் காலம் அறிந்து செயல்பட வேண்டும்.
2. பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.
விளக்கம்: ஒரு செயலை காலம் அறிந்து செய்வதால் செல்வத்தை தம்மை விட்டு நீங்காமல் கட்டி வைக்கும் கயிறாக காலம் உதவுகிறது.
3. அருவினை என்ப உளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்.
விளக்கம்: ஒரு செயலை தொடங்க அதற்கான காலமும் கருவியையும் அறிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
4. ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
விளக்கம்: காலத்திற்காகக் காத்திருந்து இடம் அறிந்து செயல்பட்டால் இவ்வுலகத்தையே வெல்ல முடியும்.
5. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
விளக்கம்: இவ்வுலகத்தை ஆள நினைப்பவர் அதற்கான காலம் வரும் வரை காத்திருப்பர்.
7. பொள்ளேன ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
விளக்கம்: அறிவுடையவர் தன் பகைவர் தீங்கு செய்தால் உடனே கோபம் கொள்ளாமல் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க காலம் வரும் வரை காத்திருப்பர்.
8. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
விளக்கம்: தமக்கு தீங்கு செய்தவரை பார்க்கும்போது பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு முடிவுகாலம் வரும் போது கெட்டு அழிவார்கள்.
9. எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
விளக்கம்: செய்தற்கரிய செயலை செய்ய அரிய வாய்ப்பு கிடைக்கும் போதே செய்து முடித்தல் வேண்டும்.
10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
விளக்கம்: கொக்கு இரைக்கு காத்திருத்து இரை வந்ததும் விரைந்து செயல்படுவது போல நாமும் காத்திருந்து செயல்பட வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக