Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

திருக்குறள் TNPSC - வலியறிதல்

திருக்குறள்- வலியறிதல்

1.  வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

விளக்கம்: ஒரு செயலை செய்யும் முன் தன் வலிமையும் பகைவர் வலிமையும் துணை நிற்பவர் வலிமையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

2.  ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் 
செல்வார்க்குச் செல்லாத தில்.
விளக்கம்: ஒரு செயலை மேற்கொள்ளும் போது.அதை பற்றி நன்கு அறிந்து தெரிந்து செயல்படுவதால் அச்செயல் நன்றாக முடியும் என்பதே.

3.  உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
விளக்கம்: தன்னுடைய பலத்தை அறிந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாமல் தோல்வி அடைத்தவர்கள் பலர்.

4.அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

விளக்கம்: எதிரியின் வலிமையை தெரிந்து கொள்ளாமல் தன்னை பெருமை பாராட்டுபவன் விரைவில் கெட்டு அழிவான்.

5. பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்.
விளக்கம்: மயில் இறகை அளவுக்கு மிகுதியாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறியும். அதுபோல வலிமைமிக்கவன் பகைவரிடம் அளவுக்கு மீறி பகை கொண்டால் அழிந்து விடுவான்.

6. நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி 
னுயிர்க்கிறுதி யாகி விடும்.
விளக்கம்: மரத்தின் நுனிக்கொம்பில் ஏற நினைப்பது உயிர்க்கே அழிவை உண்டாக்கும். எதிரியை அழிக்க எல்லை மீறி முயற்சி செய்வது அழிவை உண்டாக்கும். 

7. ஆற்றி னளவறிந் தீக அதுபொருள் 
போற்றி வழங்கும் நெறி.
விளக்கம்: தன்னிடம் இருக்கும் பொருளை அறிந்து பிறர்க்கு உதவ வேண்டும். அதுவே சிறப்பாக வாழ வழிவகுக்கும்.

8. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை 
போகா றகலாக் கடை.
விளக்கம்: வருவாய் சிறியதாக இருந்தால் செலவை விரிவுபடுத்தாமல் குறைந்து செலவு செய்தால் நம் வாழ்வில் எந்த தீங்கும் வராது.

9. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
விளக்கம்: பொருளின் அளவை அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை எல்லா வளமும் இருப்பது போல அழிந்து விடும்.

10. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
வளவரை வல்லைக் கெடும்.
விளக்கம்: தனக்கு உள்ள செல்வத்தின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் பிறர்க்கு உதவுவது செல்வத்தை எல்லாம் விரைவில் அழித்து விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓர், ஒரு, அது, அஃது பயன்பாடு