TNPSC General Tamil Part-C |
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர்.
இவர் இயற்பெயர் ஜெகதீசன்
பெற்றோர் – செ.இரா. நடராசன், வள்ளியம்மாள்.
சிறந்த கவிஞராகவும், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதிலும் முத்திரை பதித்தவர்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் பழகியவர்.
ஆசிரியர், மரபுக்கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.
“வணக்கம் வள்ளுவ” என்ற கவிதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2004-ம் ஆண்டு 'சாகித்திய அகாதமி விருது' வழங்கப்பட்டது.
அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து, இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
“வசந்தத்தில் ஒரு வானவில்” என்ற படத்திற்குக் கதை எழுதினார். 1983ல் ரோம் நகரில் நடந்த சர்வதேசப் படவிழாவில் இப்படம் பரிசு பெற்றது. இவருடைய நூல்களில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஈரோடு தமிழன்பனின் கவிதைத் தொகுப்புகள்
சிலிர்ப்புகள் (1970)
தீவுகள் கரையேறுகின்றன (1970)
தோணிகள் வருகிறது (1970)
திரும்பி வந்த தேர்வலம் (19850
ஊமைவெயில் (1985)
குடைராட்டினம் (1985)
சூரியப் பிறைகள் (1985)
கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் (1990)
என் வீட்டுக்கு எதிரே ஒர் எருக்கஞ்செடி (1995)
நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்
காலத்திற்கு ஒருநாள் முந்தி
ஊமைவெயில் (1985)
சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002)
ஒரு வண்டி சென்ரியு (2002)
இவர்களோடும் இவற்றோடும் (2003)
விடியல் விழுதுகள் (2005)
நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
ஓலைச்சுவடியும் குறுந்தகடும் (2008)
சொல்ல வந்தது (2008)
0 கருத்துகள்