குலசேகர ஆழ்வார்

சமய முன்னோடிகள் - குலசேகர ஆழ்வார்

திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட அடியவர் பன்னிருவர். இவர்கள் “ஆழ்வார்கள்” எனப்பட்டனர். அதாவது “பக்தியில் ஆழந்தவர்கள்” எனப் போற்றப் பெற்றனர்.

இவர்கள் திருமாலைப் போற்றியப் பாடிய பாசுரங்கள் “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” எனத் தொகுக்கப் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தவர் நாதமுனிகள் ஆவார்.

இந்நூல் முதலாயிரம், திருஇயற்பா, பெரிய திருமொழி, திருவாய் மொழி நான்கு பகுதிகளைப் பெற்றுள்ளது.

குலசேகர ஆழ்வார் பாடிய 105 பாக்கள் “பெருமாள் திருமொழி” என வழங்கப் பெறுகிறது.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் குலசேகரப் பெருமாள்.

இவர் கேரள மாநிலத்துத் திருவஞ்சைக் களம் என்னும் ஊரில்  அரசர் குடியில் பிறந்தவர்.

இவர் தந்தையார் திடவிரதர். இவரைச் “சேரர்கோன்” எனவும் கூறுவர்.

இவர் திருமாலின் பெருமைகளை உணர்ந்து அடியார் திருப்பணியில் தம்மை ஈடுபத்திக் கொண்டவர்.

இவர் பாடிய பக்திப் பாக்கள் “பெருமாள் திருமொழி” என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

இவரது காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு

கருத்துரையிடுக

0 கருத்துகள்