தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் 2018

தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூகந்திக்கு உழைத்திட்ட பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் திருவள்ளளுவர் திருநாளில் வழங்கப்படுகிறது.
இவ்விருதுகளை பெறுவோர் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

2018-ஆம் ஆண்டு அய்யன் திருவள்ளுவர் விருது பெற்றவர் :
முனைவர்  எம்.ஜி. அன்வர் பாட்சா

தந்தை பெரியார் விருது பெற்றவர் :  சி.பொன்னையன்

அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர் : டாக்டர் மருத்துவர் சி.ராமகுரு

பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர் : பேராசிரியர் மு.அய்க்கண்ணு

பெருந்தலைவர் காமராசர் விருது பெற்றவர் : பழ. நெடுமாறன்

மகாகவி பாரதியார் விருது பெற்றவர் : மா.பாரதி சுகுமாறன்

பாவேந்தர் விருது பெற்றவர் : கவிஞர் தியாரு

தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது பெற்றவர் : கு. கணேசன்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்றவர் :
முனைவர் சூலூர் கலைப்பித்தன்
ஆகியோருக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.

நிறுத்தக்குறிகளை எங்கு பயன்படுத்த வேண்டும்?

கருத்துரையிடுக

0 கருத்துகள்