நான்மாடக் கூடல் - 9th Tamil Book Notes

TNTET, TNPSC, Police Exams - New 9th Tamil book Notes - New 9th book study materials - New 9th Tamil Online Test
  • தமிழகத்தின் தொன்மையான நகரம் மதுரை.
  • இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் இதுவும் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இடமாகவும் இந்நகரம் விளங்குகிறது.
  • கௌடில்யர் (பொ.ஆ.மு. 370), கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் (பொ.ஆ.மு 350) போன்ற வெளிநாட்டுப் பயணிகளாலும் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கது நான்மாடக்கூடலாம் மதுரை.
  • செவ்விலக்கியத்தின் தலைநகராகத் திகழும் மதுரையின் பெருமையைக் கூறுகிறது இந்தச் சிந்துவகைப் பாடல்.
  • இலக்கணக் குறிப்பு :
    செங்கோல், பேரழகு - பண்புத்தொகைகள்
    எழுந்த - பெயரெச்சம்
    பாடாத - எதிர்மறைப் பெயரெச்சம்
    பாடு - ஏவல் வினைமுற்று
  • பகுபத உறுப்பிலக்கணம்:
    வாழ்ந்திருக்கும் - வாழ்ந்திரு + க் + க் + உம்
    வாழ்ந்திரு - பகுதி க் - சந்தி
    க் - எதிர்கால இடைநிலை
    உம் - வினைமுற்று விகுதி
  • சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக்கூடிய பாவகை. நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலிருந்து தோன்றிய இவ்வடிவம் சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வழக்கில் இருக்கிறது. சிந்துவகைப் பாடல்களை ஆராய்ந்தால், அவை சந்தமும் இயைபுத் தொடையும் அமைந்த கண்ணிகளைக் கொண்டவை என்பதை அறிய முடிகிறது.
  • ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது சிந்துப் பாவகையாகும்.
  • பாரதியார் சிந்து வகையினை அதிகமாகக் கையாண்டிருக்கிறார். அவர் சிந்துக்குத் தந்தை என்று போற்றப்படுகிறார்.
  • சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று. பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) இன்றிச் சரணங்களுக்குரிய (முடிப்பு) கண்ணிகளுடன் உடைய பாக்கள் சிலவகைச் சிந்துகளில் காணப்படுகின்றன.
  • சித்தர் பாடல்கள் பல சிந்துவகையில் அமைந்திருப்பதை நாம் காணலாம்.
  •     எ.கா. கடுவெளிச் சித்தரின் `பாபம் செய்யாதிருமனமே' என்னும் பாடல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்