TNTET, TNPSC, Police Exams - New 9th Tamil book Notes - New 9th book study materials - New 9th Tamil Online Test
- தமிழகத்தின் தொன்மையான நகரம் மதுரை.
- இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் இதுவும் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இடமாகவும் இந்நகரம் விளங்குகிறது.
- கௌடில்யர் (பொ.ஆ.மு. 370), கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் (பொ.ஆ.மு 350) போன்ற வெளிநாட்டுப் பயணிகளாலும் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கது நான்மாடக்கூடலாம் மதுரை.
- செவ்விலக்கியத்தின் தலைநகராகத் திகழும் மதுரையின் பெருமையைக் கூறுகிறது இந்தச் சிந்துவகைப் பாடல்.
- இலக்கணக் குறிப்பு :
செங்கோல், பேரழகு - பண்புத்தொகைகள்
எழுந்த - பெயரெச்சம்
பாடாத - எதிர்மறைப் பெயரெச்சம்
பாடு - ஏவல் வினைமுற்று
- பகுபத உறுப்பிலக்கணம்:
வாழ்ந்திருக்கும் - வாழ்ந்திரு + க் + க் + உம்
வாழ்ந்திரு - பகுதி க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - வினைமுற்று விகுதி - சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக்கூடிய பாவகை. நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலிருந்து தோன்றிய இவ்வடிவம் சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வழக்கில் இருக்கிறது. சிந்துவகைப் பாடல்களை ஆராய்ந்தால், அவை சந்தமும் இயைபுத் தொடையும் அமைந்த கண்ணிகளைக் கொண்டவை என்பதை அறிய முடிகிறது.
- ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது சிந்துப் பாவகையாகும்.
- பாரதியார் சிந்து வகையினை அதிகமாகக் கையாண்டிருக்கிறார். அவர் சிந்துக்குத் தந்தை என்று போற்றப்படுகிறார்.
- சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று. பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) இன்றிச் சரணங்களுக்குரிய (முடிப்பு) கண்ணிகளுடன் உடைய பாக்கள் சிலவகைச் சிந்துகளில் காணப்படுகின்றன.
- சித்தர் பாடல்கள் பல சிந்துவகையில் அமைந்திருப்பதை நாம் காணலாம்.
- எ.கா. கடுவெளிச் சித்தரின் `பாபம் செய்யாதிருமனமே' என்னும் பாடல்.
0 கருத்துகள்