நோய்த்தடைக்காப்பு மண்டலம் : கிருமிகள் காரணமாகத் தோன்றும் நோய்கள்

TNPSC exams (Group 1, Group 2, VAO, Group 4) TET | PG TRB : General Knowledge Study materials books pdf Free download Tamil - English | Police (SI) | RRB | Postal | TNEB Exam


TNPSC Group I,  Group II, Group IIA Exam 

Science Study Materials

புரோட்டோசோவாக்களும், புரோட்டோ சோவ நோய்களும்

புரோட்டோசோவாக்கள் ஒருசெல் உயிரிகளாகும். சிலவகை புரோட்டோசோவாக்கள் மனிதரில் ஒட்டுண்ணியாக இருந்து மலேரியா, சீதபேதி, தூக்க வியாதி போன்ற நோய்களை உருவாக்குகிறது. 

மனிதரில் காணப்படும் நோய் உருவாக்கும் ஒட்டுண்ணிகள்

மனிதரில், தட்டைப்புழு, கல்லீரல்புழு, உருண்டைப்புழு: டீனியாசிஸ், ஆஸ்காரி யாசிஸ், பைலேரியா போன்ற ஒட்டுண்ணிகள் மூலமாக நோய்கள் உண்டாகிறது.  

மனிதர்களிடம் காணப்படும் நுண்ணுயிரிகளும், நோய்த் தடுப்பு முறைகளும்

வைரஸ் நோய்கள்

சாதாரணச் சளி: நூற்றுக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இந்நோய்க்குக் காரணிகளாக உள்ளன. பெரியவர்களை விட குழந்தைகளே அதிகமாகப் பாதிப்படைகின்றனர். 

நோயின் அறிகுறிகள்

1.   சுவாசப்பாதையும், அதன் மேற்புறங் களிலுள்ள நாசி எபித்தீலிய திசுக்களின் வீக்கம்.

2.  சளி ஒழுகுதல்.

3.  தலைவலி, காய்ச்சல்.

இச்சாதாரணச் சளியினால் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து நிமோனியா, மூச்சுக்குழல் நோய்கள் போன்றவை இந்நோய்ச்சார்ந்த துணை உபாதைகள் ஏற்படும். 

இந்நோய் நோயாளியின் நாசி, வாய் வழியாக தெறிக்கும் திவலைகள், நோயுற்றவர் பேசுதல், சிரித்தல், சளி சிந்துதல் போன்ற செயலினால் பிறருக்கு பரவுகிறது.  

 நல்ல சத்துள்ள உணவு, நோயாளியுடன் தொடர்பினைத் தவிர்த்தல், சரியான ஆடை உடுத்துதல் போன்றவை மூலம் நோயைத் தவிர்க்க இயலுமே தவிர, வேறு விதமான சிறப்பு நடைமுறைகள் ஏதுமில்லை.

இன்புளுயன்சா

1970ல் உலகை ஆட்டிப்படைத்த ஒரு கொடுமையான நோய். 

நோய்க் காரணி:  

A (H1 N1) எனப்படும் வைரஸ் இந்நோயைப் பரப்புகிறது.  இது உருண்டை வடிவிலும் எளிதில் பரவும் கொடுமையான வகையைச் சார்ந்தது. 


நோயின் அறிகுறிகள் :

திடீரென தோன்றும் காய்ச்சல், முதுகுபுறத்திலும், கை, கால்களில் கடுமையான வலி. 

நோய்ப் பரவுதல்:

நோயுற்றவரின் நாசி, வாயிலிருந்து தெறிக்கும் திவலைகள் மூலமாக அடுத்தவரின் சுவாசக்குழல் வழியாகப் பரவுகிறது. மேலும் நோயுற்றவரின் உடமைப் பொருட்கள் மூலமாகவும் பரவும். 

பாக்ட்டீரியா நோய்கள்

பாக்ட்டீரியாக்கள் புரோகேரியாட்டிக் உயிரிகள் ஆகும். சில வகை பாக்ட்டீரியாக்கள் மனிதர்களில் ஒட்டுண்ணியாக இருந்து காலரா, டைபாய்டு, சீதபேதி போன்ற நோய்களுக்கு காரணியாகிறது. 

காசநோய் என்பது காற்றில் பரவும் நோய் வகையைச் சார்ந்தது. நுரையீரலையும் உடலின் பிற பாகங்களான எலும்புகள், மூட்டுகள், நிணநீர் சுரப்பிகள், செரிமான உறுப்புகள், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.

மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசஸ் (TB), என்ற குச்சி வடிவ பாக்ட்டீரியாக்களால் உருவாகிறது. 

அறிகுறிகள்

  • பாக்ட்டீரியாவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறு கட்டிகளுடன் கூடிய புண் உருவாகுவதால், இந்நோய்க்கு டியூபர் குளோசஸ் (காச நோய்) என்று பெயரிடப்பட்டது. 

நோய்ப் பரவுதல்: 

காற்றின் மூலம் பரவுகிறது. நோயுற்றவரின் தெறிக்கும் நீர்த் திவலைகள் மூலமும் பரவுகிறது. இந்நீர்த் திவலை, நோயுற்றவர் உணவு உண்ணும்போது, சளி வழியாகவும், பேசுதல், சிரித்தல் மூலம் வெளியேற்றப்பட்டு, நீண்ட நேரம் காற்றில் கலந்து உயிருடன் இருந்து நோய்ப்பரப்பும்.  

காச நோய், பாக்ட்டீரியாவில் செல் சுவரில் காணப்படும் ஒருவித வழுவழுப்பான ஒட்டும் தன்மையால் காற்றிலேயே அதிக நேரம் இருந்து, இதனைச் சுவாசிக்கும் மனிதரின் நுரையீரல் வழியாகப் பரவுகிறது. 

நோய் கட்டுப்பாடு

காச நோய்த் தடுப்பு ஊசியான க்ஷஊழு தடுப்பூசியை, குழந்தை பிறந்தவுடன் போடுவதன் மூலம். 

நோயாளி இருமலின் போதும், தும்மும் போதும் கைக்குட்டையால் மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளுதல், போன்றவற்றின் மூலம் இந்த நோய் தாக்குதலில் இருந்து தடுத்துக் கொள்ளலாம். 


டைபாய்டு

குச்சி வடிவ எண்ணற்ற கசை இழைகளுடன் கூடிய, சாலமெனல்லா டைஃப்பி என்ற பாக்ட்டீரியா மூலம் இந்நோய் பரவுகிறது.

அறிகுறிகள் 

தொடர்ச்சியான காய்ச்சல்.

குடற் பகுதியில் வீக்கமும் புண்களும் தோன்றுதல்.

மண்ணீரல் வீக்கம், குறிப்பிடத்தக்க சிவப்புப் புள்ளிகள் அடி வயிற்றில் தோன்றுதல் 

நோய்ப் பரவுதல் :

  1. டைபாய்டு நோயானது மாசடைந்த நீர் மற்றும் உணவின் மூலமாகவும்,
  2. டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டவர் ஒரு “தாங்கியாக” செயல்பட்டு இவர்கள் மூலமாகவும்,
  3. ஈ மொய்த்த உணவு பொருள்கள் மூலமாகவும் இந்நோய் பரவுகிறது.

நோய்த்தடுப்பும் கட்டுப்பாடும்

  • நோயுற்றவரைத் தனிமைப் படுத்துதல்
  • ஈக்களிலிருந்து பாதுகாப்பு
  • சுகாதாரமான உணவு பழக்கம்.
  • கழிவறை பயன்பாட்டைச் சுகாதாரமான முறையில் பராமரித்தல் மூலமாகவும் இந்நோய் பரவாமல் தடுக்கலாம்.
  • டைபாய்டுக்கு எதிராக தற்போது சில தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
  • ஒருமுறை டைப்பாய்டு நோய் ஏற்படின், நிலையான நோய் எதிர்ப்புத் தன்மையால் டைப்பாய்டு நோய்க்கு எதிரான பாதுகாப்பு உடலில் ஏற்படுகிறது.
    read more & download pdf science study materials

கருத்துரையிடுக

0 கருத்துகள்