இந்திய அரசியலமைப்பு | அடிப்படை உரிமைகள்


அடிப்படை உரிமைகள்  (சரத்து 14 முதல் சரத்து 35 வரை)

இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 3 (12 லிருந்து 35 வரையுள்ள சரத்துகள்) அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகிறது. அடிப்படை உரிமைகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது . 

முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை பெற்றிருந்தது. ஆனால் தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளது. 

1978 ஆம் ஆண்டு 44 ஆவது சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது. 

சொத்துரிமை சரத்து 31 இல் இருந்து நீக்கப்பட்டு பகுதி 12 சரத்து 300a-இல் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 அடிப்படை உரிமைகள் "இந்தியாவின் மகா சாசனம்" என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன. 

1948-இல் ஐநா மனித உரிமைகள் பிரகடனம் உருவானது. 

சரத்து 32 இன்படி உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்றும் சரத்து 226-இன் படி உயர்நீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்றும் கூறப்படுகிறது. 

24 ஆவது சட்டத்திருத்தம் 1971 இன் படி பாராளுமன்றம் அடிப்படை உரிமைகள் உட்பட அரசியலமைப்பின் எந்த ஒரு பகுதியையும் திருத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
அடிப்படை உரிமைகள் : சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை ,சமய சுதந்திர உரிமை, பண்பாடு மற்றும் கல்வி உரிமை, அரசியல் அமைப்பின்படி தீர்வு காணும் உரிமை.

சமத்துவ உரிமை
சரத்து 14 : சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதிலிருந்து விலக்கப்பட்டவர்கள் குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்(சரத்து 361 இன் படி).

சரத்து 15 : சாதி, மதம், இனம், பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்தல்

சரத்து 16 : பொது வேலைவாய்ப்புகளில் சம உரிமை

சரத்து 17 : தீண்டாமை ஒழிப்பு. தீண்டாமை ஒழிப்பு சட்டம் 1955-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் இது 1976 ஆம் ஆண்டு சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டமாக மாற்றப்பட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இல் இயற்றப்பட்டது.)

சரத்து 18 : அரசு அனுமதியின்றி பெரும் இராணுவ மற்றும் கல்வி தவிர்த்த பதவி மற்றும் பட்டங்களை தடை செய்வது. ராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல். பாரதரத்னா, பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற அரசால் வழங்கப்படும் விருதுகள் இவ்விதிப்படி வழங்கப்படுகிறது.

சுதந்திர உரிமை (சரத்து 19 - 22)
சரத்து 19 : குடிமக்களுக்கு பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள் மற்றும் அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமை மற்றும் தொழில் செய்யும் உரிமை போன்ற ஆறுவகையான சுதந்திர உரிமைகளை வழங்குகிறது.

சரத்து 20 : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

சரத்து 21 : வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை. 
359 இன்படி தேசிய நெருக்கடி அறிவிக்கப்பட்டால் குடியரசுத்தலைவர் சரத்து 20 மற்றும் 21 தவிர எந்த அடிப்படை உரிமையையும் நிறுத்தி வைக்கலாம் என கூறப்படுகிறது.

சரத்து 21 a - தொடக்கக் கல்வி பெறும் உரிமை. 86 ஆவது சட்டத்திருத்தம் 2002 இன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும். கல்வி உரிமை பாதுகாப்பு சட்டம் 2009 இல் உருவாக்கப்பட்டது.

சரத்து 22 : சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக்காவலில் வைப்பதற்கு எதிரான பாதுகாப்பு உரிமை. கைது செய்யப்பட்ட நபருக்கு கைது செய்யப்பட்ட காரணத்தை தெரிவிக்க வேண்டும், கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

சரத்து 23 : கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தை தடுப்பது.

சரத்து 24 : தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல். 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட்டது மற்றும் 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.

சமய சுதந்திர உரிமை
சரத்து 25 : ஒருவருக்கு தான் விரும்பும் மதத்தை பின்பற்றவும் அதை பரப்பவும் உரிமை வழங்கப்படுகிறது. சரத்து 26 : மத நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை

சரத்து 27: எந்த ஒரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கு எதிரான சுதந்திரம்.

சரத்து 28 : மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க உரிமை. கல்வி நிறுவனங்களில் மத போதனைகளை தடைசெய்கிறது.

கல்வி மற்றும் கலாச்சார உரிமை
சரத்து 29 : சிறுபான்மையினர் தனது எழுத்து, மொழி, பண்பாடு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கும் உரிமை

சரத்து 30 : சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமை

சரத்து 31 : சொத்துரிமை. இது 1978ஆம் ஆண்டு 44 வது சட்டத் திருத்தம் மூலமாக நீக்கப்பட்டு சட்ட உரிமையாக கொண்டு செல்லப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்