அடியார்க்கு நல்லார்க்கு முன்னதாகவும் முன்மாதிரியாகவும் இருந்த உரை அரும்பதவுரை.
அடியார்க்கு நல்லார் உரையில் இளம்பூரணாரும் அரும்பதவுரையாசிரியரும் இடம்பெறுகின்றனர். இவ்விருவர்தம் காலமும் கி.பி.11 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்றபட்டது எனக் கருதப்படுகின்றது. மேலும், இவர் உரையில் கலிங்கத்துப் பரணி பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன.
கானல்வரி நீங்கலாக முதல் 19 காதைகளுக்கு இவர் உரை கிடைத்துள்ளது
மேற்கோள் பாடலின் நூற்பெயரைச் சுட்டுவது இவரது தனிச்சிறப்புகளுள் ஒன்று.
கலிங்கத்துப்பரணியை முதல் முதலாக மேற்கோள் காட்டிய உரையாசிரியர்.
முத்தமிழிலும் வல்ல ஒரே உரையாசிரியர்.
பொழிப்புரை, அருஞ்சொல் விளக்கம், மேற்கோள், இலக்கண விளக்கம் என இவர் உரை செல்கிறது.
பரதம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரதசேனாபதியம், மதிவாணன் நாடகத் தமிழ் போன்ற நாடக நூல்கள் இருந்தமையை இவர் உரையால்தான் அறிகிறோம்.
இவர் உரையை முதன்முதலாக பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
இவர் நிரம்பர் என்னும் ஊரினர் என்பதையும், இவருக்கு நிரம்பையர் காவலன் என்று மற்றொரு பெயரும் உண்டு
0 கருத்துகள்