இரட்டைமலை சீனிவாசன் TNPSC

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், கோழியாலம் என்ற கிராமத்தில் 1859 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 7-ஆம் நாள் பிறந்தார்.

இவர் பள்ளிப் பருவத்தில் இருந்து தீண்டாமை கொடுமைக்கு ஆளானார். இவர் தன்னுடையச் சொந்த ஊரிலும், தஞ்சாவூரிலும் பள்ளிப் படிப்பை முடித்து கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

இனப் போராளியாகவும், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். தன் இன மக்கள் அனுபவிக்கும் வேதனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க பாடுபடுவதை தன்னுடைய வாழ்நாள் இலட்சியம் எனத் தீர்மானித்துத் தொண்டாற்றினார். 

இவர் 1891-ஆம் ஆண்டு “பறையர் மகாஜன சபை” என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் இந்த அமைப்பு “ஆதிதிராவிட மகாஜன சபை” என்று அழைக்கப்பட்டது.  இச்சபை மூலம் ஆதிதிராவிட மக்கள் சமுதாய முன்னேற்றம் அடைய பாடுபட்டார்.

பின்னர் 1893-ஆம் ஆண்டு “பறையர்” என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இந்தப் பத்திரிகை தாழ்த்தப்பட்ட இனமக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆதி திராவிட இன முன்னேற்றத்திற்காக இப்பத்திரிகையில் தொடர்ந்து எழுச்சியூட்டக் கூடிய கட்டுரைகளை எழுதினார். 

1923-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது. 

1930 ஜுன் மாதம் 1-ஆம் தேதி ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது.

1930 ஜுன் மாதம் 6ஆம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. 

அண்ணல் காந்தியடிகளுக்கு மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து போடுவதற்குக் காரணமாக இருந்தவர் இரட்டை மலை சீனிவாசன்தான்.

இரட்டைமலை சீனிவாசன் தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வழக்கறிஞராக இருந்தபோது நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றினார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1930-ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் கலந்து கொண்டார். 

அண்ணல் காந்தியடிகளால் தொடங்கப்பட்ட தீண்டத் தகாதோர் ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

மேலும் 1939ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பைத் தொடங்கினார். 

தன்னுடைய வாழ்க்கையைத் ஆதி திராவிட மக்களுக்காக அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 18.09.1945 அன்று தன்னுடைய 85-வது வயதில் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.

செல்வி ஜெ.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 7ஆம் தேதியை அரசு விழாவாக அறிவித்து ஆணையிட்டார்.

இரட்டைமலை சீனிவாசன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்