திருக்குறள் - அன்புடைமை

TNPSC பாடத்திட்டம் – பொதுத்தமிழ்

பகுதி-ஆ   இலக்கியம்
 

திருக்குறள் - இருபத்தைந்து அதிகாரம் மட்டும் 

அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்.
விளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிபடுவது அன்பு.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர். அன்புஉடையவர் பிறர் துன்பம் அடையும் போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.
அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்தவே. அவ்வன்பை நம் வாழ்வில் வளர்ந்து கொள்ள வேண்டும்.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும்.அந்த அன்பானது இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும்.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்: அன்பு என்பது பகையை வெல்வும்,நட்பை வளர்க்கவும் உதவுகிறது.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவது போல அன்பில்லாதவர்களும் அழிவர்.

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
விளக்கம்: பாலை நிலத்தில் வாடிபோன மரம் தளிர்க்காது. அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்ந்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.

புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 
விளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை இருந்தும் பயன்இல்லை என்பதாம்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர். அன்பு இல்லாதவரை பிணமாக கருதுவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்