ஆறாம் வகுப்பு | இன்பத்தமிழ்

New 6th Tamil Text Book | TNPSC All Group Exams &
TNTET Paper-2 Exam General Tamil Study Notes


புதிய ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாடத்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLICE, TRB, RRB,  ஆகிய தேர்வுகளுக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இன்பத்தமிழ்
தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- பாரதிதாசன்
தமிழ் அமுதத்தைப் போலவே மிக இனிமையானது. அத்தகைய இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.
தமிழுக்கு மணம் என்றும் பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.
தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது.
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2

தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும் 

Tamil ilakkiya varalaru notes in tamil pdf

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பயண இலக்கிய நூல்கள் 

இளந்தமிழே!  - சிற்பி பாலசுப்பிரமணியம் 12th New Tamil Book

கடையெழு வள்ளல்கள் 

தமிழ் வளர்த்த சான்றோர்கள் 

பாரதிதாசன் குறிப்பு:
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார். எனவே, அவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.

சொற்பொருள் : நிருமித்த - உருவாக்கிய
இலக்கணக்குறிப்பு : நிருமித்த ஊர் - பெயரெச்சம்   

தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
- கவிஞர் காசி ஆனந்தன்

கருத்துரையிடுக

1 கருத்துகள்