காப்பிய இலக்கியத் தகவல்கள்
- பொருட் தொடர்நிலைச் செய்யுள் காப்பியம் எனப்படும்.
- காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம்.
- காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும்.
- அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும்.
- அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும்.
ஐம்பெருங்காப்பியங்கள்
- ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர் (நன்னூல் 387 உரை).
- ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன்முதலாகக் குறிப்பிட்டவர் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா).
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
- மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
- வளையாபதி - பெயர் தெரியவில்லை
- குண்டலகேசி - நாதகுத்தனார்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
- சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்.
- மணிமேகலை, குண்டலகேசி என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள்.
ஐஞ்சிறுகாப்பியங்கள்
- நாக குமார காவியம் - ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)
- உதயண குமார காவியம் - ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)
- யசோதர காவியம் - ஆசிரியர் தெரியவில்லை
- நீலகேசி - ஆசிரியர் தெரியவில்லை
- சூளாமணி - தோலா மொழித்தேவர்
- ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும்.
- அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் என்று இதன் இலக்கணத்தைத் தண்டியலங்காரம் கூறுகிறது.
- ஐஞ்சிறு காப்பியம் என்ற வழக்கினை ஏற்படுத்தியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார்.
- சமண சமயத்துப் பெண் துறவியின் பொதுப்பெயர் கந்தியார்.
- கந்தியைக் கவுந்தி என்றும் கூறுவர்.
- குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்ட நூல் நீலகேசி.
Click & Download Pdf
6th to 10th Tamil Text books | Tamil ilakkanam pdf
9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணக்குறிப்பு - 9th Std Tamil Grammar
தமிழ் இலக்கணம் இடுகுறிப்பெயர், காரணப்பெயர்
சிந்து சமவெளி நாகரிகம் | 6th Social Science Online Test-01
0 கருத்துகள்