அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2
தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும்
Tamil ilakkiya varalaru notes in tamil pdf
புதுக்கவிதைக்கு - பாரதியார்
சமுதாயப் புரட்சிக்கு - பாரதிதாசன்
பொதுவுடைமைக்கு - திரு.வி.க
தனித்தமிழுக்கு - மறைமலையடிகள்
பேச்சுக்கலைக்கு - அறிஞர் அண்ணா
சிறுகதைக்கு - புதுமைப்பித்தன்
வீரமாமுனிவர் (1680 - 1747)
சமுதாயப் புரட்சிக்கு - பாரதிதாசன்
பொதுவுடைமைக்கு - திரு.வி.க
தனித்தமிழுக்கு - மறைமலையடிகள்
பேச்சுக்கலைக்கு - அறிஞர் அண்ணா
சிறுகதைக்கு - புதுமைப்பித்தன்
வீரமாமுனிவர் (1680 - 1747)
- இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
- இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
- இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
- ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
- தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
- பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.
- தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
- தமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.
- கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.
- தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.
- ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
- கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.
- பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
- “தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.
- “மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்.
- இவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிறு
- இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.
- இவர் தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
- அவருடைய பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
- பராப்பரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில கண்ணிகள்.
- இவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்.
- இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
- இவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள் நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.
- அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர் தடையுளதோ? எனக் கேட்கிறார்.
- "தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை "என்கிறார்.
1 கருத்துகள்
அருமை நன்றி
பதிலளிநீக்கு