தமிழ் வளர்த்த சான்றோர்கள் | வீரமாமுனிவர்

புதுக்கவிதைக்கு     -    பாரதியார்
சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன்
பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க
தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள்
பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா
சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன்

வீரமாமுனிவர் (1680 - 1747)
  • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
  • இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
  • இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
  • ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
  • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
  • பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.
  • தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
  • தமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.
  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.
  • தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.
  • ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
  • கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.
  • பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
  • “தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.
குணங்குடி மஸ்தான் (1788-1835)
  • “மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்.
  • இவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிறு
  • இளம்வயதிலே  முற்றும்  துறந்தவராய் வாழ்ந்தவர்.
  • இவர்  தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
  • அவருடைய  பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல  இயற்றியுள்ளார்.
  • பராப்பரக்கண்ணி,  எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி,  நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில  கண்ணிகள்.
  • இவர்தம்  பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப்  பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை  அழைத்து செல்லும்.
  • இவர் குருநிலை,  தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை,  தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும்  வகையில் பாடல்கள் பல  இயற்றியுள்ளார்.
  • இவர் மீது  கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள்    நான்மணிமாலை ஒன்று  இயற்றியுள்ளார்.
  • அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற்  களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர்  தடையுளதோ? எனக் கேட்கிறார்.
  •  "தடை உண்டு என உரைப்பார்  தமிழுலகில் இல்லை "என்கிறார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்