இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்கு | அம்புஜத்தம்மாள்

இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு 

வேலு நாச்சியார்

 கடலூர் அஞ்சலையம்மாள்

அம்புஜத்தம்மாள்

அம்புஜத்தம்மாள்

  • அம்புஜத்தம்மாள் வசதியான குடும்பத்தில் 1899ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் பிறந்தார்.
  • அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, எளிமையாக வாழ்ந்தார். பட்டு, பகட்டு, ஆங்கிலமோகம் அனைத்தையும் துறந்தார். பல்வேறு கட்டுப்பாடுகள் மிகுந்த குடும்பத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டார் .

  • வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

  • காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அம்புஜத்தம்மாள் அழைக்கப்பட்டார்.

  • தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.

  • அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக, நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்