கடையெழு வள்ளல்கள்

சிறுபாணாற்றுப்படை காட்டும் தொகுப்பு

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2

தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும் 

Tamil ilakkiya varalaru notes in tamil pdf

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பயண இலக்கிய நூல்கள் 

இளந்தமிழே!  - சிற்பி பாலசுப்பிரமணியம் 12th New Tamil Book

கடையெழு வள்ளல்கள் 

  1. பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன்
  2. பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன்
  3. காரி - ஈர நன்மொழி கூறியவன் (councilman)
  4. ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்
  5. அதிகன் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்
  6. நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்.
  7. ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.
புறநானூறு காட்டும் தொகுப்பு

  1. பாரி - பறம்பிற் கோமான் (பரம்புமலை அரசன், மூவேந்தரோடு போரிட்டவன்)
  2. ஓரி - கொல்லிமலை நாட்டை ஆண்டவன்
  3. காரி - காரி என்னும் குதிரைமேல் சென்று போரிட்டவன்
  4. மலையன் - 'மறப்போர் மலையன்', மாரி போல் ஈகைப்பண்பு கொண்டவன்.
  5. எழினி - குதிரைமலை நாட்டை ஆண்டவன் ("ஊராது ஏந்திய குதிரை"), கூவிளங்கண்ணி மாலை அணிந்தவன். கூர்வேல் கொண்டு போர் புரிபவன்.
  6. பேகன் - கடவுள் காக்கும் மலை (பொதினி என்னும் பழனி) நாடன்
  7. ஆய் - "மோசி பாடிய ஆய்"
படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
Jana Tamil Model Test Paper (New 9th Book 2019)

கருத்துரையிடுக

0 கருத்துகள்