தேவநேயபாவாணர்
வாழ்க்கைக் குறிப்பு:
ஊர் : திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
பெற்றோர் : ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்
சிறப்புப் பெயர்:
செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு)
செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்)
மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்)
தனித்தமிழ் ஊற்று; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்; தமிழ்ப்பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
ஊர் : திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
பெற்றோர் : ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்
சிறப்புப் பெயர்:
செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு)
செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்)
மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்)
தனித்தமிழ் ஊற்று; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்; தமிழ்ப்பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
படைப்புகள்:
- சொல்லாராய்ச்சிக் கட்டுரை
- உயர்தரக் கட்டுரை இலக்கணம்
- திருக்குறள் மரபுரை
- தமிழர் மதம்
- முதல் தாய்மொழி
- தமிழ்நாட்டு விளையாட்டுகள்
- தமிழர் திருமணம்
- பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
- வடமொழி வரலாறு
- தமிழர் வரலாறு
- மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (இறுதி கட்டுரை)
- மண்ணிலே விண்
- இயற்றமிழ் இலக்கணம் (முதல் நூல்)
- கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
- ஒப்பியல் மொழி நூல்
- திராவிடத்தாய்
- பழந்தமிழ் ஆட்சி
- இசைத்தமிழ் கலம்பகம்
- தமிழ் வரலாறு
- தமிழ் கடன் கொடுத்து தழைக்குமா?
- இன்னிசைக்கோவை
- வேர்ச்சொல் கட்டுரைகள்
- தமிழ் இலக்கிய வரலாறு
- செந்தமிழ்க் காஞ்சி(பாடல் தொகுப்பு)
- இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
முதலான நாற்பத்துமூன்று நூல்களைப் படைத்துள்ளார்.
பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக 08.05.1974அன்று
பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுதிகள்
சிலவற்றை வெளிக்கொணர்ந்தார்; இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
எழுதியுள்ளார்.
தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்.
தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் மறைமலையடிகள்.
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் தேவநேயப் பாவாணர்.
1 கருத்துகள்
YOUR POST REALLY HELPED ME.Thanks for sharing this valuable information with us. Waiting for more cool stuff like this .
பதிலளிநீக்கு