தமிழ் மகளிரின் சிறப்பு | தில்லையாடி வள்ளியம்மை

இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு

தமிழ் மகளிரின் சிறப்பு | தில்லையாடி வள்ளியம்மை

இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு 

வேலு நாச்சியார்

 கடலூர் அஞ்சலையம்மாள்

அம்புஜத்தம்மாள்

பெற்றோரும் பிறப்பும்:

  • வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பார்க் என்னும் நகரில் பிறந்தார்.
  • இவரின் பெற்றோர் - முனுசாமி, மங்களம்.
  • இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பட்டார்
அறப்போர்:
  • தென்னாப்பிரிக்க நாட்டில் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று அந்நாட்டு
  • உச்ச நீதிமன்றம் 1912 ஆண் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் இந்தியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டத்தின்போது காந்தியடிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
  • 1913 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23 ஆம் தேதி வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
  • அவருக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 3 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்தது.
சிறைவாழ்க்கை:
  • சிறையில் வள்ளியம்மைக்கு கல்லும் மண்ணும் கலந்த உணவே தரப்பட்டது.
  • அவரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
  • சிறையில் உயிருக்கு போராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
நாட்டுப்பற்று:
  • விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மை தமது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.
  • இதனை அறிந்த காந்தியடிகள் அவரை காண வந்தார்.
  • "சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?" என்று காந்தியடிகள் அவரிடம் கேட்டார்.
  • அதற்கு வள்ளியம்மை, "இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்" என்று கூறினார்.
  • அத்துடன் இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் என்றார்.
  • உடல் நலம் குன்றிய வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தமது 16 ஆம் வயதில் மரணம் அடைந்தார்
காந்தியடிகளின் கருத்து:
  • என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது என்று காந்தியடிகள் மனம் வருந்தினார்.
  • மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.
  • அவருடைய தியாகம் வீண் போகாது.
  • சத்தியத்திற்காக உயிர் நீத்த அவருடைய உருவம் என கண்முன் நிற்கிறது.
  • நம்பிக்கை தான் அவரது ஆயுதம்" என்று வள்ளியம்மை குறித்து "இந்தியன் ஒப்பீனியன்" இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
  • தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் "தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு செய்த சிறப்புகள்:
  • தில்லையாடி - நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கடையூருக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • தில்லையாடியில் தமிழக அரசு அவரது சிலையை நிறுவி உள்ளது.
  • கோ-ஆப்-டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையில் உள்ள தனது 600வது விற்பனை மையத்திற்கு
  • "தில்லையாடி வள்ளியம்மை மாளிகை" என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது.
  • சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பென்புலிக்குட்டிக்கு தமிழக முதல்வர், தில்லையாடி வள்ளியம்மை நினைவாக "வள்ளி" எனப் பெயரிட்டார்.
  • தில்லையாடி வள்ளியம்மை நினைவைப் போற்றி நடுவணரசு, அஞ்சல்தலையும் அஞ்சல் உறையும் வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்