நால்வகைச் சொற்கள்

  • தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.

    (எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.

  • இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
பெயர்ச்சொல்
  • ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

            (எ.கா.)   பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

வினைச்சொல்

  • வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

    (எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.

இடைச்சொல்

  • பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.

    (எ.கா.)     உம் - தந்தையும் தாயும்
            மற்று - மற்றொருவர்
            ஐ - திருக்குறளை 

உரிச்சொல்

  • பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்

(எ.கா.)     
            மா - மாநகரம்
            சால - சாலச்சிறந்தது

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்