New 6th Standard Tamil Books (2nd Term) - Moothurai - Important Notes


மூதுரை

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெ ல்லாம் சிறப்பு.

- ஒளவையார்

 சொல்லும் பொருளும்

        மாசற - குற்றம் இல்லாமல்
        சீர்தூக்கின்  - ஒப்பிட்டு ஆராய்ந்தால்
        தேசம் - நாடு

பாடலின் பொருள்
மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

நூல் வெளி
  • மூதுரையின் ஆசிரியர் ஒளவையார். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
  • மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். 
  • சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. 
  • இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்