TNPSC Group Exams, TET, PG TRB, TN Police Exams
அகநானூறு Pdf Study Material
- அகநூல்
- 400 பாடல்கள்
- ஆசிரியப்பாவால் ஆனது
- பாடியவர்கள் 145 பேர்
- தொகுத்தவர் உருத்திர சன்மனார்
- தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- கடவுள் வாழ்த்துப்பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
- அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது
- மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
- 1-120 பாடல் களிற்றியானை நிறை (120 பாடல்கள்)
- 121-300 பாடல் - மணிமிடைபவளம் ( 180 பாடல்கள்)
- 301-400 பாடல் - நித்திலக் கோவை (100 பாடல்கள்)
- சிற்றெல்லை 13 அடி பேரெல்லை 31 அடி
- அகநானூறு நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது
செய்திகள்
- குடவோலைத் தேர்தல் குறித்துக் கூறும் நூல் அகநானூறு
- சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் அகநூல் அகநானூறு.
- வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் புலவர்கள் பரணர், மாமூலர்
- சோழ நாட்டு வருவாய் குடந்தையில் வைத்துக் காக்கப்பட்டது
- பண்டைத் தமிழர் திருமணம் குறித்துக் கூறும் நூல் (86, 136) அகநானூறு
- திங்கள் ரோகிணியுடன் கூடிய நன்நாளில் திருமணம் நடந்தது
மேற்கோள்
“பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ’’ - மாமூலர்
“நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி தோழி’’ - மாமூலர்
“யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னாடு வந்து கறியொடு பெயரும்’’
- எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
“தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்’’
- குறுங்குடி மருதனார்
“யாமே, பிரிவின்றி இயைந்த துவரா நட்பின்
இருதலைப்புள்ளின் ஒருயிர் அம்மே’’ - கபிலர்
“தமிழ்கெழு மூவர் காக்கும் நிலம்’’ - மாமூலர்
0 கருத்துகள்