பகுதி – (ஆ) இலக்கியம்
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
கைந்நிலை நூல் குறிப்பு
பெயர்க்காரணம்:
- கை = ஒழுக்கம்
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் "கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்
- ஐந்திணை அறுபது
குறிப்புகள்:
- இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன.
- தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே.
- வடசொல் கலப்பு மிகுந்த நூல்.
- ஆசிரியர் பாண்டியனை "தென்னவன் கொற்கை" என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்.
மேற்கோள்கள் :
“ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர்
காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின்
ஏந்தல் இளமுலை ஈரெயிற்றாய் என்நெஞ்சு
நீந்தும் நெடுவிடைச் சென்று.’’
“ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
குற்றம் ஒரூஉம குணத்தளாக் - கற்றறிஞர்ப்
பேணும் தகையாளாக் கொண்கண் குறிப்பறிந்து
நாணும் தகையளாம் பெண்’’
0 கருத்துகள்