கைந்நிலை | TNPSC | PG TRB Study Notes

 பகுதி – (ஆ) இலக்கியம்


கைந்நிலை நூல் குறிப்பு

  • ஆசிரியர் : மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
  • மொத்த பாடல் எண்ணிக்கை : 60 (5x12=60)
  • திணை : ஐந்து அகத்திணைகளும்
  • திணை வரிசை : குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்.
  • பாவகை : வெண்பா
பெயர்க்காரணம்:
  • கை = ஒழுக்கம்
  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் "கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்  
  • ஐந்திணை அறுபது

குறிப்புகள்:
  • இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன.
  • தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே.
  • வடசொல் கலப்பு மிகுந்த நூல்.
  • ஆசிரியர் பாண்டியனை "தென்னவன் கொற்கை" என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்.
மேற்கோள்கள் :

“ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர்
காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின்
ஏந்தல் இளமுலை ஈரெயிற்றாய் என்நெஞ்சு
நீந்தும் நெடுவிடைச் சென்று.’’

“ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
குற்றம் ஒரூஉம குணத்தளாக் - கற்றறிஞர்ப்
பேணும் தகையாளாக் கொண்கண் குறிப்பறிந்து
நாணும் தகையளாம் பெண்’’

கருத்துரையிடுக

0 கருத்துகள்