திருக்குறள் | TNPSC Group 4 Exams

திருக்குறள் குறித்து புதிய தமிழ்ப்பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள
TNPSC, TET, PG TRB, TN POLICE EXAMS
போட்டித்தேர்வுகளுக்கான குறிப்புகள்

  • திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். 
  • வான்புகழ் வள்ளுவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. 
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 
  • திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. 
  • "திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. 
  • திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. 
  • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் 
    குறுகத் தரித்த குறள்"

    என்று திருக்குறளின் பெருமையை ஒளவையார். 

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்