மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெ ல்லாம் சிறப்பு.
- ஒளவையார்
சொல்லும் பொருளும்
மாசற - குற்றம் இல்லாமல்
சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்தால்
தேசம் - நாடு
பாடலின் பொருள்
மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
நூல் வெளி
- மூதுரையின் ஆசிரியர் ஒளவையார். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
- இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
பகுதி – (ஆ) இலக்கியம்
0 கருத்துகள்